6 31
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு சுற்றுலா செல்லும் தமது நாட்டவருக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை

Share

இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும், தமது நாட்டவர்களுக்கு, பிரித்தானியா, நோய் அபாயத்துடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நுளம்புகளால் பரவும் நோயுடன் தொடர்புடைய அபாயங்களை முன்னிலைப்படுத்தி, இந்த பயண ஆலோசனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சிக்குன்குனியா, டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் ஆகியவற்றின் அபாயங்கள் இந்த ஆலோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இலங்கையில் தங்கியிருக்கும் போது இந்த சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்க்க சரியான தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்.

அத்துடன், பயணத்திற்கு குறைந்தது எட்டு வாரங்களுக்கு முன்பே இலங்கைக்கான அண்மைய தடுப்பூசி பரிந்துரைகளைச் சரிபார்க்குமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

எனவே பயணிகள் தங்கள் பயணங்களை ஆரம்பிப்பதற்கு முன்னர், குறிப்பிடத்தக்க சுகாதார அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரித்தானியா தமது நாட்டவரிடம் கோரியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...