6 31
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு சுற்றுலா செல்லும் தமது நாட்டவருக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை

Share

இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும், தமது நாட்டவர்களுக்கு, பிரித்தானியா, நோய் அபாயத்துடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நுளம்புகளால் பரவும் நோயுடன் தொடர்புடைய அபாயங்களை முன்னிலைப்படுத்தி, இந்த பயண ஆலோசனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சிக்குன்குனியா, டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் ஆகியவற்றின் அபாயங்கள் இந்த ஆலோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இலங்கையில் தங்கியிருக்கும் போது இந்த சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்க்க சரியான தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்.

அத்துடன், பயணத்திற்கு குறைந்தது எட்டு வாரங்களுக்கு முன்பே இலங்கைக்கான அண்மைய தடுப்பூசி பரிந்துரைகளைச் சரிபார்க்குமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

எனவே பயணிகள் தங்கள் பயணங்களை ஆரம்பிப்பதற்கு முன்னர், குறிப்பிடத்தக்க சுகாதார அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரித்தானியா தமது நாட்டவரிடம் கோரியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...