இலங்கைக்கு ஆறு மாதத்தில் கிடைத்துள்ள வருமானம்!
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஆறு மாதத்தில் கிடைத்துள்ள வருமானம்!

Share

இலங்கைக்கு ஆறு மாதத்தில் கிடைத்துள்ள வருமானம்!

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாத் துறை மூலமாக இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் தொடர்பான தகவல்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இதன்படி, 986.2 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தினை இலங்கை சுற்றுலாத் துறை மூலமாக ஈட்டியுள்ளது.

ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் இலங்கை 158.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.

அதன்படி, ஜூன் மாதத்தில் இலங்கையின் மதிப்பிடப்பட்ட சுற்றுலா வருமானம் வருடாந்தம் 45.1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

மே மாதத்தில் சுற்றுலாத்துறையின் வருவாய் 131.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜூன் மாதத்தில் 100,388 சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 648,775 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பிக்குகளுக்கு மீண்டும் விளக்கமறியல் – நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு!

திருகோணமலை கடற்கரையோரத்தில் சர்ச்சைக்குரிய முறையில் புத்தர் சிலையை நிறுவி, கரையோரப் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாகக் குற்றம்...

1562298412 Four arrested for assaulting traffic cops at Batticaloa L
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அட்டகாசம்: புகைப்படக் கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு சி.ஐ.டி அதிகாரிகள் உட்பட நால்வர் கைது!

மட்டக்களப்பு நாவலடி கடற்கரைப் பகுதியில், தவறவிட்ட கமரா பையைத் தேடிச் சென்ற புகைப்படக் கலைஞர்கள் மீது...

vijay tvk1212026m
செய்திகள்இந்தியா

கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகம்: டெல்லியில் சி.பி.ஐ தலைமையகத்தில் விஜய் ஆஜர் – 2-வது நாளாகக் கிடுக்கிப்பிடி விசாரணை!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் மற்றும் நடிகர் விஜய், கரூரில் நடந்த கூட்ட நெரிசல்...

25 694ccb470889e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தர் சிலையை பாதுகாக்க மீண்டும் போராட வேண்டியுள்ளது – திருகோணமலையில் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர காட்டம்!

திருகோணமலை கடற்கரையோரத்தில் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு இன்று (19) திருகோணமலை...