வெளிநாட்டு குடும்பத்தை நெகிழ வைத்த இலங்கையர்
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு குடும்பத்தை நெகிழ வைத்த இலங்கையர்

Share

வெளிநாட்டு குடும்பத்தை நெகிழ வைத்த இலங்கையர்

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட மாலைத்தீவு குடும்பத்தினரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்கிஸ்ஸ மிஹிது மாவத்தையில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வாடகைக்கு முச்சக்கர வண்டி சேவை பெற்ற மாலைதீவு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முச்சக்கரவண்டியில் தங்கள் பையை மறந்து விட்டு சென்றுள்ளனர்.

அவர்கள் மறந்து விட்டு சென்ற பைக்குள் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணய ஆவணங்கள், கடவுச்சீட்டுகள் அடங்கிய பையை உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைப்பதற்கு முச்சக்கர வண்டி சாரதி செயற்பட்டுள்ளார்.

மாலைத்தீவைச் சேர்ந்த தந்தை, தாய், மகள், மகன் ஆகிய நால்வரும் சில வாரங்கள் ஓய்வு எடுப்பதற்காக மிஹிது மாவத்தையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.

அதற்கமைய, கடந்த காலை குடும்பத்தினர் அனைவரும் பல பைகளுடன் வந்து பிரசாத் ரொட்ரிகோ என்பவரின் முச்சக்கரவண்டியைப் பெற்றனர். பயணத்தின் முடிவில், ஒரு பையை மறந்து விட்டது சென்றுள்ளனர்.

அதனை அவதானிக்காமல் வந்த சாரதி சிறிது நேரத்தின் பின்னர் கவனித்துள்ளார்.

அதன் பின்னர் மீண்டும் அந்த குடும்பத்தை தேடி சென்று பையை ஒப்படைத்துள்ளார். பணப்பை சோதனையிட்ட வெளிநாட்டவர் இலங்கையரின் நேர்மையை பாராட்டி பரிசுகளையும் வழங்கியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...