வெளிநாட்டு குடும்பத்தை நெகிழ வைத்த இலங்கையர்
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு குடும்பத்தை நெகிழ வைத்த இலங்கையர்

Share

வெளிநாட்டு குடும்பத்தை நெகிழ வைத்த இலங்கையர்

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட மாலைத்தீவு குடும்பத்தினரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்கிஸ்ஸ மிஹிது மாவத்தையில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வாடகைக்கு முச்சக்கர வண்டி சேவை பெற்ற மாலைதீவு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முச்சக்கரவண்டியில் தங்கள் பையை மறந்து விட்டு சென்றுள்ளனர்.

அவர்கள் மறந்து விட்டு சென்ற பைக்குள் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணய ஆவணங்கள், கடவுச்சீட்டுகள் அடங்கிய பையை உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைப்பதற்கு முச்சக்கர வண்டி சாரதி செயற்பட்டுள்ளார்.

மாலைத்தீவைச் சேர்ந்த தந்தை, தாய், மகள், மகன் ஆகிய நால்வரும் சில வாரங்கள் ஓய்வு எடுப்பதற்காக மிஹிது மாவத்தையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.

அதற்கமைய, கடந்த காலை குடும்பத்தினர் அனைவரும் பல பைகளுடன் வந்து பிரசாத் ரொட்ரிகோ என்பவரின் முச்சக்கரவண்டியைப் பெற்றனர். பயணத்தின் முடிவில், ஒரு பையை மறந்து விட்டது சென்றுள்ளனர்.

அதனை அவதானிக்காமல் வந்த சாரதி சிறிது நேரத்தின் பின்னர் கவனித்துள்ளார்.

அதன் பின்னர் மீண்டும் அந்த குடும்பத்தை தேடி சென்று பையை ஒப்படைத்துள்ளார். பணப்பை சோதனையிட்ட வெளிநாட்டவர் இலங்கையரின் நேர்மையை பாராட்டி பரிசுகளையும் வழங்கியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...