24 6652b428e9bcf
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தை ஏமாற்றிய வர்த்தகர்கள் : கோடிக்கணக்கான கறுப்பு பணம்

Share

அரசாங்கத்தை ஏமாற்றிய வர்த்தகர்கள் : கோடிக்கணக்கான கறுப்பு பணம்

இலங்கையில் கோடிக்கணக்கான ரூபா வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி 01 முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் செலுத்த வேண்டிய மொத்த வரி தொகை 106,608 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பணம் செலுத்தத் தவறியவர்களின் எண்ணிக்கை 4479 என மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடி முதல் 1.5 கோடி வரை வரி செலுத்தாதவர்கள் 3108 உள்ளனர். இதில் மது உற்பத்தி செய்யும் 28 நிறுவனங்களும் அடங்கும்.

இதில் உள்நாட்டு வருமானத் திணைக்களம் அதிக தொகையை வசூலிக்க வேண்டும், அந்த தொகை 105,600 கோடி ரூபாவாகும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பான 350 நிலுவையிலுள்ள வரி வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது.

அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் இருந்து 2934 முறையீடுகள் மற்றும் வரி ஆணைக்குழுவிடமிருந்து 1505 முறையீடுகள் நிலுவையில் உள்ளதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...