11 15
இலங்கைசெய்திகள்

இலங்கை சுற்றுலாத்துறையில் விரிவாக்கம்: முக்கிய நாடுகளில் வேலைத்திட்டங்கள் தீவிரம்

Share

இலங்கை சுற்றுலாத்துறையில் விரிவாக்கம்: முக்கிய நாடுகளில் வேலைத்திட்டங்கள் தீவிரம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நளின் பெரேரா (Nalin Perera) தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து இலங்கை சுற்றுலாத்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகளுக்கிடையேயான விளம்பரப்படுத்தல் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

அதன்படி, முதல் கட்ட விளம்பரப்படுத்தல் வேலைத்திட்டங்களுக்காக சீனா (China), பிரித்தானியா (UK), பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இந்தியாவை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவு செய்துள்ளது.

இரண்டாம் கட்டமாக ரஷ்யா, அவுஸ்திரேலியா (Australia), ஜப்பான், தென் கொரியா, போலந்து, இத்தாலி மற்றும் ஸ்காண்டிநேவியா, மத்திய கிழக்கு நாடுகள், பெனலக்ஸ் நாடுகள், [பெல்ஜியம் (Belgium), நெதர்லாந்து (Netherlands), லக்ஸ்சம்பர்க் (Luxembourg)] ஆகிய நாடுகள் தெரிவு செய்யப்படுமென்று நளின் பெரேரா கூறியுள்ளார்.

இந்த வேலைத்திட்டங்கள் அடுத்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை 700,000 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்த்துள்ளதாகவும், குறிப்பாக, 2024 ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...