1 48
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பாதுகாப்பு குறித்து வெளிநாட்டவர்கள் வெளியிட்ட தகவல்

Share

இலங்கையின் பாதுகாப்பு குறித்து வெளிநாட்டவர்கள் வெளியிட்ட தகவல்

இலங்கையில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து நாடாளவிய ரீதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

 

“நான் கலிபோர்னியாவில் இருந்து வந்தேன். நான் இங்கு எந்த ஆபத்தையும் உணரவில்லை. நான் எந்த அசௌகரியத்தையும் உணரவில்லை” என அமெரிக்கர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை முழுமையான பாதுகாப்பான நாடு. அவுஸ்திரேலியாவை விட பாதுகாப்பானது. நான் இலங்கையை நேசிக்கிறேன். இது ஒரு அற்புதமான நாடு. நாடு பாதுகாப்பாக உள்ளது” என அவுஸ்திரேலிய நாட்டு பெண் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை மிகவும் பாதுகாப்பானது, இலங்கை ஒரு சிறந்த நாடு. எந்தவொரு வெளிநாட்டு சுற்றுலா பயணியும் அச்சமடைய தேவையில்லை என மேலும் பல சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

 

அறுகம்பே கடற்கரை மற்றும் அப்பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...