8 39
இலங்கைசெய்திகள்

தோல்வியை ஏற்றுக் கொண்ட ரணில்! அநுரவின் ஆட்சி மூன்று மாதங்கள் தானா

Share

தோல்வியை ஏற்றுக் கொண்ட ரணில்! அநுரவின் ஆட்சி மூன்று மாதங்கள் தானா

என்னைப் போலவே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெறாத ஜனாதிபதிதான் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில்(Negombo) இன்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைப் பார்த்தால் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சி, மூன்று மாதமா அல்லது மூன்று வாரமா என்று எனக்குத் தெரியவில்லை.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு(Anurakumara Dissanayakara) பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே அவர் நாட்டையும் நாடாளுமன்றத்தையும் கொண்டுச் செல்ல முடியும்.

தேர்தலில் தோற்றால் வீட்டிலேயே இருங்கள் என்று என்னைப் பார்த்துச் சொல்கின்றார்கள். ஆமாம், நான் தேர்தலில் தோற்றேன். அதை ஏற்றுக் கொள்கின்றேன்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுத்து மக்களிடம் ஆணையை கேட்டேன். ஆனால் பெரும்பான்மை மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் 51 சதவீத வாக்குளைப் பெறவில்லை. அவருக்கும் பெரும்பான்மையை மக்கள் வழங்கவில்லை. எனவே அவரும் என்னைப் போலத்தான் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
11 8
இலங்கைசெய்திகள்

செம்மணியில் இன்று கண்டெடுக்கப்பட்ட முக்கிய அடையாளம்! தோண்ட தோண்ட காத்திருக்கும் அதிர்ச்சி

இதுவரை காலமும் செம்மணி மனித புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய...

10 8
இலங்கைசெய்திகள்

ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம்!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை...

8 8
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்து ஆலயத்தின் செயற்பாடு

தமிழர் பகுதியான மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த...

9 7
இலங்கைசெய்திகள்

விசாரணை வளையத்துக்குள் சிக்கப் போகும் அரசாங்க அதிகாரிகள்! சிலர் தப்பியோட்டம்

பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும், சுமார் 18 உயர் அரச...