24 66ae2132e37ce
இலங்கைசெய்திகள்

இலங்கையின் வருமான நடவடிக்கை: சர்வதேச நாணய நிதியம் விசேட கோரிக்கை

Share

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம், பொருத்தமான வருமான நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான செலவினக் கட்டுப்பாடு ஆகியவற்றை மையப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதமான நடுத்தர கால முதன்மை இருப்பு இலக்கை அடையவும், இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் இது தேவையானது என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான திட்டத்தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மோட்டார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளின் திட்டமிட்ட தளர்வு 2025 ஆம் ஆண்டில் வருமானத்; திரட்டலை கொண்டு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வரி விலக்குகளைத் தவிர்ப்பது, ஊழல் அபாயங்கள் மற்றும் நிதி வருமானக் கசிவுகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஊகிக்கக்கூடிய வெளிப்படையான வரி முறையை உறுதி செய்வது, சாத்தியமான நிதிச் செலவைத் தவிர்க்கவும், எரிசக்தி விலைகளைத் தொடர்ந்து செலவு-மீட்பு நிலைகளில் பராமரிப்பது மிகவும் முக்கியமானது என்று ப்ரூயர் வலியுறுத்தியுள்ளார்.

பணப் பரிமாற்றங்களின் மூலம் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பது முக்கியமானதாக உள்ளது அத்துடன், கொள்கை சறுக்கல்கள் மீட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடன் நிலைத்தன்மையை உரிய பாதையில் கொண்டு செல்வதில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்காக இலங்கை அதிகாரிகளைப் பாராட்டிய அவர், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவேற்றுவது மற்றும் அதிகாரப்பூர்வ கடன் குழு மற்றும் சீனா எக்ஸிம் வங்கியுடன் ஒப்பந்தங்களை இறுதி செய்வது முக்கிய மைல்கற்களாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...