2 27
இலங்கைசெய்திகள்

வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை ஜனாதிபதி தேர்தல்

Share

வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை ஜனாதிபதி தேர்தல்

இலங்கை வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக 2024ஆம் ஆண்டுக்கான தேர்தல் பதிவாகியுள்ளது.

மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அதிகளவான வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்கள்.

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.

1982ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முறையாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது 06 வேட்பாளர்களும் 1988ஆம் ஆண்டு 3 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு 06 பேரும், 1999 ஆம் ஆண்டு 13 பேரும், 2005 ஆம் ஆண்டு 13 பேரும், 2010 ஆம் ஆண்டு 22 பேரும், 2015 ஆம் ஆண்டு19 பேரும் போட்டியிட்டனர்.

ஒரு வேட்பாளர் அதிகரித்தால் செலவு மேலும் 200 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

ஆனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியில் இருந்து போட்டியிடும் வேட்பாளர் 50,000 ரூபாயும், சுயேச்சை வேட்பாளர் 75,000 ரூபாயும் கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.

1981 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இந்த தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று காலை ஒன்பது மணிக்கு வேட்புமனு தாக்குதல் செய்யும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதன்போது கட்டுப்பணம் செலுத்திய சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...