2 27
இலங்கைசெய்திகள்

வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை ஜனாதிபதி தேர்தல்

Share

வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை ஜனாதிபதி தேர்தல்

இலங்கை வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக 2024ஆம் ஆண்டுக்கான தேர்தல் பதிவாகியுள்ளது.

மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அதிகளவான வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்கள்.

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.

1982ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முறையாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது 06 வேட்பாளர்களும் 1988ஆம் ஆண்டு 3 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு 06 பேரும், 1999 ஆம் ஆண்டு 13 பேரும், 2005 ஆம் ஆண்டு 13 பேரும், 2010 ஆம் ஆண்டு 22 பேரும், 2015 ஆம் ஆண்டு19 பேரும் போட்டியிட்டனர்.

ஒரு வேட்பாளர் அதிகரித்தால் செலவு மேலும் 200 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

ஆனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியில் இருந்து போட்டியிடும் வேட்பாளர் 50,000 ரூபாயும், சுயேச்சை வேட்பாளர் 75,000 ரூபாயும் கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.

1981 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இந்த தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று காலை ஒன்பது மணிக்கு வேட்புமனு தாக்குதல் செய்யும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதன்போது கட்டுப்பணம் செலுத்திய சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...