6 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – 3 இலட்சம் பேர் ஆபத்தில்

Share

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,000 அமெரிக்க டொலர்கள் என்ற சாதனை அளவைத் தாண்டியுள்ள நிலையில், இலங்கையில் உள்ளூர் தங்கச் சந்தை சடுதியாக வீழ்ச்சி அடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

இதன் காரணமாக மூன்று லட்சம் பேருடைய வேலைகள் ஆபத்தில் இருப்பதாக அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் செயலாளர் ராமன் பாலசுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

“உலகளவில் தங்க விலை அதிகரிப்பால் உள்ளூர் தங்கத்தின் தேவை 50 சதவீதத்திற்கு அதிகமாகக் குறைய வாய்ப்புள்ளது.

இந்த நிலைமை நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால், பல நகைக்கடைக்காரர்கள் தங்கள் பணியாளர்களைக் குறைக்க வேண்டியிருக்கும்.

கொள்வனவாளர்கள் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தால், தற்போதைய பணியாளர்களைப் பராமரிக்க எந்த நியாயமான காரணமும் இல்லை. எனவே, ஆட்குறைப்பு தவிர்க்க முடியாததாகிவிடும்.

இலங்கையின் மிகப்பெரிய பாரம்பரிய வர்த்தகங்களில் ஒன்றான நகைத் தொழில், ஏற்கனவே சுமார் 300,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்குகிறது.

உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையே 22 கரட் மற்றும் 24 கரட் தங்கத்தின் விலையில் திடீர் உயர்வுக்கு காரணமாகும்.

இதுபோன்ற சமயங்களில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடங்களைத் தேடுகிறார்கள். தங்கம் மிகவும் நம்பகமான சொத்துக்களில் ஒன்றாகும்.

தங்கத்திற்கான உலகளாவிய தேவை அதிகரிப்பே இந்த சாதனை விலை உயர்வுக்கு முக்கிய காரணம்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்...

world 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கண் தானத்திற்குப் பெருகும் ஆதரவு: 84 சதவீத மக்கள் விருப்பம்

இலங்கையில் உள்ள மக்களில் சுமார் 84 சதவீதம் பேர் தமது கண்களைத் தானம் செய்ய விருப்பம்...

world 64
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

விசாரணை அமைப்புகள் அழைக்கும் போதெல்லாம் தானும் தனது கட்சியும் நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா...

world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...