6 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – 3 இலட்சம் பேர் ஆபத்தில்

Share

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,000 அமெரிக்க டொலர்கள் என்ற சாதனை அளவைத் தாண்டியுள்ள நிலையில், இலங்கையில் உள்ளூர் தங்கச் சந்தை சடுதியாக வீழ்ச்சி அடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

இதன் காரணமாக மூன்று லட்சம் பேருடைய வேலைகள் ஆபத்தில் இருப்பதாக அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் செயலாளர் ராமன் பாலசுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

“உலகளவில் தங்க விலை அதிகரிப்பால் உள்ளூர் தங்கத்தின் தேவை 50 சதவீதத்திற்கு அதிகமாகக் குறைய வாய்ப்புள்ளது.

இந்த நிலைமை நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால், பல நகைக்கடைக்காரர்கள் தங்கள் பணியாளர்களைக் குறைக்க வேண்டியிருக்கும்.

கொள்வனவாளர்கள் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தால், தற்போதைய பணியாளர்களைப் பராமரிக்க எந்த நியாயமான காரணமும் இல்லை. எனவே, ஆட்குறைப்பு தவிர்க்க முடியாததாகிவிடும்.

இலங்கையின் மிகப்பெரிய பாரம்பரிய வர்த்தகங்களில் ஒன்றான நகைத் தொழில், ஏற்கனவே சுமார் 300,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்குகிறது.

உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையே 22 கரட் மற்றும் 24 கரட் தங்கத்தின் விலையில் திடீர் உயர்வுக்கு காரணமாகும்.

இதுபோன்ற சமயங்களில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடங்களைத் தேடுகிறார்கள். தங்கம் மிகவும் நம்பகமான சொத்துக்களில் ஒன்றாகும்.

தங்கத்திற்கான உலகளாவிய தேவை அதிகரிப்பே இந்த சாதனை விலை உயர்வுக்கு முக்கிய காரணம்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...