25 684e8bb4788b1
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கூடுதலாக காட்டப்பட்டுள்ளது

Share

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு அந்நிய செலாவணி கையிருப்புகள் சுமார் 1.4 பில்லியன் டொலர்களினால் மேலதிகமாக காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் உள்நாட்டு இணையதளமொன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையின் வெளிநாட்டு இருப்புகள் குறித்து சந்தேகங்கள்” எனும் தலைப்பிலான இந்த அறிக்கையில், சீனாவின் பீப்பிள்ஸ் வங்கியுடன் உள்ள சுமார் 1.4 பில்லியன்அமெரிக்க டொலர் அளவிலான நாணயப் பரிமாற்ற ஒப்பந்தம், சர்வதேச நாணய நிதியம் (IMF) வகைப்படுத்தும் விதிகளுக்கு ஏற்ப பரிசோதிக்கத்தக்க நிகர நிதி அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

IMF விதிகளின்படி, நிபந்தனையின்றி உடனடியாக பயன்படுத்தக்கூடிய சொத்துகளே நிகர நிதியாக (usable reserves) ஏற்கப்படும். ஆனால் இந்த சீன பரிமாற்றத்தில் பல கட்டுப்பாடுகள் உள்ளதால், அதனை பயன்பாட்டு நிதியாகக் கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 மே மாதத்தில், 6.3 பில்லியன் டொலர் இருப்பு உள்ளதாக மத்திய வங்கி அறிவித்தது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் IMF தரநிலைக்கு ஏற்ப சீன பரிமாற்றத்தை நீக்கினால், உண்மையான பயன்படுத்தக்கூடிய இருப்பு 4.9 பில்லியன் டொலர்களாக குறைகிறது.

2022 ஏப்ரல் முதல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள், வெளிநாட்டு நிதி இருப்புகளைத் தெரிவிக்கும் போது, இந்த சீன பரிமாற்றத்தையும் சேர்த்துக் கொண்டு பொருளாதார மீட்பு நிலை சாதகமாக உள்ளது என தவறான பார்வையை ஏற்படுத்தியதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் வரையறைக்கு இணையாகவே “பயன்படுத்தக்கூடிய நிதி” அளவை கணக்கிட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுபோன்ற தவறான நிதி ஆவணங்கள் வெளிநாட்டு கடனளிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை குறைக்கும் என்றும், நிதி மேலாண்மையில் வெளிப்படைத்தன்மை பாதிக்கப்படும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சர்வதேசத்தின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு இந்த அறிக்கை பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய சாத்தியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...