25 684e8bb4788b1
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கூடுதலாக காட்டப்பட்டுள்ளது

Share

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு அந்நிய செலாவணி கையிருப்புகள் சுமார் 1.4 பில்லியன் டொலர்களினால் மேலதிகமாக காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் உள்நாட்டு இணையதளமொன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையின் வெளிநாட்டு இருப்புகள் குறித்து சந்தேகங்கள்” எனும் தலைப்பிலான இந்த அறிக்கையில், சீனாவின் பீப்பிள்ஸ் வங்கியுடன் உள்ள சுமார் 1.4 பில்லியன்அமெரிக்க டொலர் அளவிலான நாணயப் பரிமாற்ற ஒப்பந்தம், சர்வதேச நாணய நிதியம் (IMF) வகைப்படுத்தும் விதிகளுக்கு ஏற்ப பரிசோதிக்கத்தக்க நிகர நிதி அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

IMF விதிகளின்படி, நிபந்தனையின்றி உடனடியாக பயன்படுத்தக்கூடிய சொத்துகளே நிகர நிதியாக (usable reserves) ஏற்கப்படும். ஆனால் இந்த சீன பரிமாற்றத்தில் பல கட்டுப்பாடுகள் உள்ளதால், அதனை பயன்பாட்டு நிதியாகக் கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 மே மாதத்தில், 6.3 பில்லியன் டொலர் இருப்பு உள்ளதாக மத்திய வங்கி அறிவித்தது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் IMF தரநிலைக்கு ஏற்ப சீன பரிமாற்றத்தை நீக்கினால், உண்மையான பயன்படுத்தக்கூடிய இருப்பு 4.9 பில்லியன் டொலர்களாக குறைகிறது.

2022 ஏப்ரல் முதல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள், வெளிநாட்டு நிதி இருப்புகளைத் தெரிவிக்கும் போது, இந்த சீன பரிமாற்றத்தையும் சேர்த்துக் கொண்டு பொருளாதார மீட்பு நிலை சாதகமாக உள்ளது என தவறான பார்வையை ஏற்படுத்தியதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் வரையறைக்கு இணையாகவே “பயன்படுத்தக்கூடிய நிதி” அளவை கணக்கிட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுபோன்ற தவறான நிதி ஆவணங்கள் வெளிநாட்டு கடனளிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை குறைக்கும் என்றும், நிதி மேலாண்மையில் வெளிப்படைத்தன்மை பாதிக்கப்படும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சர்வதேசத்தின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு இந்த அறிக்கை பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய சாத்தியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 684eb0babe439
இலங்கைசெய்திகள்

சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அவசர அறிவித்தல்

வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மழையுடனான வானிலை தொடரும் நிலையில்...

images 1 6
இலங்கைசெய்திகள்

மத்தியகிழக்கில் சூழ்ந்துள்ள போர்பதற்றம்: ஈரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு

ஈரான்(Iran)- இஸ்ரேல் தாக்குதல் தீவிமைடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள...

25 684e82bd5233d
உலகம்செய்திகள்

ஈரான் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹக்கீம் எம்.பி கண்டனம்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...

nivethathomas 1558533069 1587480498 1617885728
சினிமாசெய்திகள்

ஜில்லா விஜய் தங்கையாக நடித்த நிவேதா தாமஸா இது.. இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே

நடிகை நிவேதா தாமஸ் தமிழ் சினிமாவில் பாப்புலரான நடிகைகளில் ஒருவர் தான். அவர் குழந்தையாக இருக்கும்போதே...