tamilni 118 scaled
இலங்கைசெய்திகள்

அதிகரித்த அந்நிய செலாவணி கையிருப்பு

Share

அதிகரித்த அந்நிய செலாவணி கையிருப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு அக்டோபர் மாத இறுதியில் 3 ஆயிரத்து 562 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் அந்நிய செலாவணி கையிருப்பானது 0.6 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இலங்கையில் அந்திய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையை அடுத்து கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கம் பல்வேறு இறக்குமதி தடைகளை விதித்திருந்தது.

மறுபுறம் அந்நிய செலாவணி கையிருப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் முதல் தவணையாக வழங்கப்பட்ட நிதி மூலம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மேம்பட்டிருந்தது.

இதேவேளை,1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமமான, சீனாவின் மக்கள் வங்கியின் பரிமாற்ற வசதியை இந்த கையிருப்பு உள்ளடக்கியதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பரிமாற்ற வசதியை பயன்படுத்துவது நிபந்தனைகளுக்கு உட்பட்டது எனவும் இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இலங்கையின் மொத்த அந்நிய செலாவணி கையிருப்பு 3.8 பில்லியன் அமெரிக்க லொர்களாக இருந்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...