22 2
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பான நடவடிக்கைகள் தாமதமாகலாம்: சர்வதேசத்திடம் இருந்து கிடைத்த தகவல்

Share

இலங்கை தொடர்பான நடவடிக்கைகள் தாமதமாகலாம்: சர்வதேசத்திடம் இருந்து கிடைத்த தகவல்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வரை தாமதமாகும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அநுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகம், சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்ய முயற்சிக்கும் அதேநேரம், இலங்கை பொதுமக்கள் மீதான சுமையை குறைப்பதற்கான வழிகளைத் தேடுவரே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் விதிமுறைகளில் உள்ள வரி சீர்திருத்தங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதை ஜனாதிபதி நோக்கமாகக் கொண்டுள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளில் சிலவற்றை, குறிப்பாக வரி அதிகரிப்புகளை பிற்போட்டு, அதன் மூலம், பொருளாதார நெருக்கடியுடன் போராடும் குடிமக்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை குறைக்கவும் அநுர நிர்வாகம் முயற்சிக்கிறது.

சர்வதேச நாணய நிதிய பணியாளர்களின் இலங்கை பயணத்தின் முடிவில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...