24 662624972660a
இலங்கைசெய்திகள்

மருந்து இறக்குமதி தொடர்பில் விசேட அறிவிப்பு

Share

மருந்து இறக்குமதி தொடர்பில் விசேட அறிவிப்பு

நாட்டின் மருந்து இறக்குமதியிலிருந்து 30 சதவீதத்தினை 2030ஆம் ஆண்டளவில் குறைக்க முடியும் என இலங்கை மருந்துத் தொழிற்றுறை சம்மேளனம் (Chamber of the Pharmaceutical) தெரிவித்துள்ளது.

மருந்து உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள பைபேக் (buyback) உத்தரவாதமும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

“தற்போது, 15 வீதத்திற்கும் அதிகமான மருந்து உள்ளூர் சந்தை உற்பத்தியால் ஆனது.

கடந்த 10 ஆண்டுகளில் காணப்படுகின்ற குறிப்பிடத்தக்க அதிகரிப்பினால் உள்ளூர் உற்பத்தித் திறன் 2030ஆம் ஆண்டில் ஏறத்தாழ 30 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் மருந்துத் தொழில் சுமார் 60,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. 1950களில் இலங்கை மிகவும் வலுவான மருந்து உற்பத்தித் தளத்தைக் கொண்டிருந்தது.

ஆனால், தேசியமயமாக்கல் காரணமாக பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா (India), பங்களாதேஷ் (Bangladesh) மற்றும் பாகிஸ்தானுக்குச் (Pakistan) செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

குறித்த தனியார் மருந்துத் தொழிலாளர்கள் அங்கு தொழிற்சாலைகளை நிறுவி இப்போது இலங்கைக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

இந்நிலையிலேயே, உள்ளூர் மருந்துத் தொழில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பினை கொண்டிருக்கின்றது.

அதில் 300 மில்லியன் தனியார் துறை மற்றும் 200 மில்லியன் அரச துறையை சேரந்ததாகும்.

மேலும், அரசு மற்றும் தனியார் ஆகிய இரண்டையும் சேர்த்து 172.13 பில்லியன் ரூபாவும் தனியார் துறையிலிருந்து 129.13 பில்லியன் ரூபாவாகவும் காணப்படுகின்றது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...