6 8
இலங்கைசெய்திகள்

தெற்காசியாவில் மூன்றாவது இடத்தில் இலங்கை: எதில் தெரியுமா…!

Share

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களால் சிறுவர்கள் இடம்பெயர்வதில், தெற்காசியாவில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பிராந்திய அறிக்கை தெரிவித்துள்ளது.

2016 முதல் 2022 வரையான ஏழு ஆண்டுகளில், இலங்கையில் சுமார் 2 இலட்சத்து 80 ஆயிரம் சிறுவர்கள் (மொத்த சிறுவர் சனத்தொகையில் 4.6%) இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்திய மற்றும் பங்களாதேஷுக்கு அடுத்தபடியாக இலங்கை உள்ளது. புயல்கள் (54%) மற்றும் வெள்ளப்பெருக்கு (44%) ஆகியவை இலங்கையில் சிறுவர்கள் இடம்பெயர முக்கிய காரணங்களாக உள்ளன.

2016ஆம் ஆண்டு ஏற்பட்ட ‘ரோனு’ சூறாவளியால் மட்டும் 141,000 சிறுவர்கள் இடம்பெயர்ந்தனர். முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட வெளியேற்ற நடைமுறைகள் காரணமாகவே உயிர் சேதங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் சுட்டிக்காட்டியுள்ளது.

இடம்பெயர்வு அபாயத்தை எதிர்கொள்ளும் சிறுவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசாங்கங்கள் மற்றும் பங்காளிகள் இணைந்து செயல்பட வேண்டும் என யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...