6 8
இலங்கைசெய்திகள்

தெற்காசியாவில் மூன்றாவது இடத்தில் இலங்கை: எதில் தெரியுமா…!

Share

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களால் சிறுவர்கள் இடம்பெயர்வதில், தெற்காசியாவில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பிராந்திய அறிக்கை தெரிவித்துள்ளது.

2016 முதல் 2022 வரையான ஏழு ஆண்டுகளில், இலங்கையில் சுமார் 2 இலட்சத்து 80 ஆயிரம் சிறுவர்கள் (மொத்த சிறுவர் சனத்தொகையில் 4.6%) இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்திய மற்றும் பங்களாதேஷுக்கு அடுத்தபடியாக இலங்கை உள்ளது. புயல்கள் (54%) மற்றும் வெள்ளப்பெருக்கு (44%) ஆகியவை இலங்கையில் சிறுவர்கள் இடம்பெயர முக்கிய காரணங்களாக உள்ளன.

2016ஆம் ஆண்டு ஏற்பட்ட ‘ரோனு’ சூறாவளியால் மட்டும் 141,000 சிறுவர்கள் இடம்பெயர்ந்தனர். முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட வெளியேற்ற நடைமுறைகள் காரணமாகவே உயிர் சேதங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் சுட்டிக்காட்டியுள்ளது.

இடம்பெயர்வு அபாயத்தை எதிர்கொள்ளும் சிறுவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசாங்கங்கள் மற்றும் பங்காளிகள் இணைந்து செயல்பட வேண்டும் என யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...