தொடருந்து சேவையில் தாமதம்!! பயணிகளுக்கான அறிவிப்பு
இலங்கை தொடருந்து திணைக்களம் பொதுமக்களுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
அவ்வகையில், பிரதான பாதையில் தொடருந்து சேவையில் தாமதம் ஏற்படலாம் என இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசந்துறை – கொழும்பு இரவு நேர அஞ்சல் தொடருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இத்தாமத நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வயங்கொடைக்கும் கம்பஹக்கும் இடையிலான பகுதியிலேயே இப்தொடருந்தின் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.