7 47
இலங்கைசெய்திகள்

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

Share

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

இன்று (30.10.2024) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

 

தொடருந்து நிலைய அதிபர்கள் அடுத்த 72 மணி நேரத்துக்குள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.

 

நடைமுறைகளை மீறி தொடருந்து நிலைய அதிபர்களை நியமித்தமைக்கு எதிராகவே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.

 

குறித்த தகவல்களை இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) தெரிவித்துள்ளது.

 

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் தொடருந்து கட்டுப்பாட்டாளர்களை குறித்த பதவிகளுக்கான பரீட்சைகளை நடத்தி நியமிப்பதற்கும் அல்லது பதவி உயர்வு வழங்கி சம்பள உயர்வு வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

ஆயினும் குறித்த நடைமுறைக்கு மாறாக தற்போது இடம்பெறுவதாக தெரிவித்தே இந்த தொழிற்சங்க போராட்டம் எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...

Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...