8 26
இலங்கைசெய்திகள்

இறுதி நேர சிறப்பு நேர்காணலில் ரணில் பகிரங்க எச்சரிக்கை

Share

இறுதி நேர சிறப்பு நேர்காணலில் ரணில் பகிரங்க எச்சரிக்கை

மாலைதீவு பொருளாதார ரீதியாக சற்று மோசமான நிலைமையில் இருப்பதால் அங்கு வேலை செய்யும் இலங்கையர்களில் குறைந்தது 10 ஆயிரம் பேராவது மீண்டும் இலங்கைக்கு வரவேண்டியிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் (18.09.2024) ஊடகவியலாளர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“மாலைதீவு சற்று மோசமான நிலைமையில் தான் உள்ளது. எனினும், இவ்வாரத்திற்குள் நிதியை பெற்றுக்கொள்ள அந்நாடு முயற்சிக்கின்றது. அந்நாட்டின் நிதியமைச்சர் இங்கும் வந்து எமது உதவியைக் கோரியுள்ளார்.

அங்கு ஏதும் பிரச்சினை ஏற்பட்டால், அங்கு வேலை செய்யும் 30 – 40 ஆயிரம் இலங்கையர்களுக்கு பாதிப்பாக அமையும். குறைந்தது 10 ஆயிரம் பேராவது மீண்டும் இலங்கைக்கு வரவேண்டியிருக்கும்.

எமது நாட்டிலிருந்துதான் உணவு உள்ளிட்ட பல விடயங்கள் அங்கு அனுப்பப்படுகின்றன. அது இல்லாது போகும். அத்தோடு, மாலைதீவுக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் இங்கே வருவதை தவிர்க்கிறார்கள்.

அவர்கள் இங்கே வந்துவிட்டு மாலைத்தீவுக்கு செல்வதில்லை. எனவே, இதுவும் பாதிக்கப்படலாம். எனவே, மாலைதீவு பிரச்சினை எம்முடன் நேரடித் தொடர்பாக இருப்பதால், இதனை நிவர்த்தி செய்வது எப்படி என்றுதான் நடவடிக்கை எடுக்கிறோம்.

இல்லாவிட்டால், மாலைதீவில் பிரச்சினை ஏற்பட்டால் அது இலங்கையையும் தான் பாதிப்படையச் செய்யும்” என்றுள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...