8 26
இலங்கைசெய்திகள்

இறுதி நேர சிறப்பு நேர்காணலில் ரணில் பகிரங்க எச்சரிக்கை

Share

இறுதி நேர சிறப்பு நேர்காணலில் ரணில் பகிரங்க எச்சரிக்கை

மாலைதீவு பொருளாதார ரீதியாக சற்று மோசமான நிலைமையில் இருப்பதால் அங்கு வேலை செய்யும் இலங்கையர்களில் குறைந்தது 10 ஆயிரம் பேராவது மீண்டும் இலங்கைக்கு வரவேண்டியிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் (18.09.2024) ஊடகவியலாளர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“மாலைதீவு சற்று மோசமான நிலைமையில் தான் உள்ளது. எனினும், இவ்வாரத்திற்குள் நிதியை பெற்றுக்கொள்ள அந்நாடு முயற்சிக்கின்றது. அந்நாட்டின் நிதியமைச்சர் இங்கும் வந்து எமது உதவியைக் கோரியுள்ளார்.

அங்கு ஏதும் பிரச்சினை ஏற்பட்டால், அங்கு வேலை செய்யும் 30 – 40 ஆயிரம் இலங்கையர்களுக்கு பாதிப்பாக அமையும். குறைந்தது 10 ஆயிரம் பேராவது மீண்டும் இலங்கைக்கு வரவேண்டியிருக்கும்.

எமது நாட்டிலிருந்துதான் உணவு உள்ளிட்ட பல விடயங்கள் அங்கு அனுப்பப்படுகின்றன. அது இல்லாது போகும். அத்தோடு, மாலைதீவுக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் இங்கே வருவதை தவிர்க்கிறார்கள்.

அவர்கள் இங்கே வந்துவிட்டு மாலைத்தீவுக்கு செல்வதில்லை. எனவே, இதுவும் பாதிக்கப்படலாம். எனவே, மாலைதீவு பிரச்சினை எம்முடன் நேரடித் தொடர்பாக இருப்பதால், இதனை நிவர்த்தி செய்வது எப்படி என்றுதான் நடவடிக்கை எடுக்கிறோம்.

இல்லாவிட்டால், மாலைதீவில் பிரச்சினை ஏற்பட்டால் அது இலங்கையையும் தான் பாதிப்படையச் செய்யும்” என்றுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...