2 24
இலங்கைசெய்திகள்

தீவிரமடையும் தேர்தல் களத்தில் திடீர் அதிகரிப்பு காட்டும் முக்கிய புள்ளிகள்

Share

தீவிரமடையும் தேர்தல் களத்தில் திடீர் அதிகரிப்பு காட்டும் முக்கிய புள்ளிகள்

ஜனாதிபதி தேர்தல் களம் இலங்கையில் சூடுபிடித்துள்ள நிலையில் அநுர குமாரவிற்கான ஆதரவு கரம் நாளுக்கு நாள் அதிகரித்து முன்னிலையில் இடம்பிடித்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மீதம் இருக்கும் நான்கு நாட்களில் ரணில் முக்கிய களப்படைகளை நகர்த்தி வருவதுடன், சஜித் தனது மனைவியையும் இறக்கியுள்ளார்.

இதன் காரணமாக சஜித் பிரேமதாச தோல்வியை தழுவலாம் என்ற அச்சத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் போலி பிரசாரங்களை அள்ளி வீசி தாக்குதல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் மூன்று முக்கிய வேட்பாளர்கள் களமிறங்கி தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், வாக்குகள் சிதறடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக தென்னிலங்கை வேட்பாளர்களின் கவனம் வடக்கு, கிழக்கு பக்கம் திரும்பியுள்ளதுடன், சுமார் 2 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த பின்னணியில் இதுவரை வெளியான கருத்து கணிப்புகளின் படி தபால்மூல வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க முன்னிலை வகிப்பதாகவும், அதிகளவிலான அரச ஊழியர்கள் வாக்களித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...