10 13
இலங்கைசெய்திகள்

சரத் பொன்சேகாவின் அதிரடி அறிவிப்பு

Share

சரத் பொன்சேகாவின் அதிரடி அறிவிப்பு

இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.

73 வயதான ஜெனரல் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கடமையாற்றி வருவதோடு, 2010 ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியிருந்தார்.

இவ்வாறான ஒரு பின்னணியில் தான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக சரத் பொன்சேகா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஊழல் மோசடிகளை இல்லாத ஒலித்து இலங்கையை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கு அனைத்து இலங்கையர்களும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறும் சரத் பொன்சேகா தனது எக்ஸ் தளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...