3 44
இலங்கைசெய்திகள்

சஜித் அணியின் அரசியல் பிரமுகர்கள் ரணிலிடம் திடீரென படையெடுக்க முக்கிய காரணம்

Share

சஜித் அணியின் அரசியல் பிரமுகர்கள் ரணிலிடம் திடீரென படையெடுக்க முக்கிய காரணம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்த நகர்வுகளை இலங்கையின் அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ள நிலையில் கட்சித்தாவல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க தேர்தலில் வெற்றிப்பெறக்கூடிய சாத்தியம் அதிகளவில் உள்ளமையினால் சஜித் அணியின் அரசியல் பிரமுகர்கள் பலர் திடீரென ரணிலின் பக்கம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலுக்கான திகதி அறிவிப்பதற்கு முன்னரே வெளிநாட்டு உறவுகளில் அநுரகுமார கவனம் செலுத்தியதோடு அதற்கான அடித்தளங்களை பலமாக பதித்துள்ளார். அதேபோல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சர்வதேச உறவுகளை தனது அரசியல் வரலாற்றின் மூலம் நிலைநிறுத்தியுள்ளார்.

இருப்பினும், உள்நாட்டு அரசியலிலும் கட்சித்தாவல்களின் மூலம் பெரும் சிக்கலை சந்தித்துள்ள சஜித் பிரேமதாச வெளிநாட்டு ரீதியிலான உறவுகளை மேற்கொள்வதில் பின்வாங்கி வருகிறார். இதன் காரணமாக சஜித் அணியின் அரசியல் பிரமுகர்கள் பலர் ரணிலின் பக்கம் படையெடுத்துள்ளனர்.

தேர்தல் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், அமெரிக்காவின் சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் பல விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Pregnant Child 1200px 25 07 18 1 1000x600 1
செய்திகள்இலங்கை

கர்ப்பிணித் தாய்மார்கள் போதைப்பொருள் பாவனை: குழந்தைகளின் அபாயம் குறித்து அமைச்சர் சரோஜா போல்ராஜ் எச்சரிக்கை!

சமீபகாலமாகப் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...