3 44
இலங்கைசெய்திகள்

சஜித் அணியின் அரசியல் பிரமுகர்கள் ரணிலிடம் திடீரென படையெடுக்க முக்கிய காரணம்

Share

சஜித் அணியின் அரசியல் பிரமுகர்கள் ரணிலிடம் திடீரென படையெடுக்க முக்கிய காரணம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்த நகர்வுகளை இலங்கையின் அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ள நிலையில் கட்சித்தாவல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க தேர்தலில் வெற்றிப்பெறக்கூடிய சாத்தியம் அதிகளவில் உள்ளமையினால் சஜித் அணியின் அரசியல் பிரமுகர்கள் பலர் திடீரென ரணிலின் பக்கம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலுக்கான திகதி அறிவிப்பதற்கு முன்னரே வெளிநாட்டு உறவுகளில் அநுரகுமார கவனம் செலுத்தியதோடு அதற்கான அடித்தளங்களை பலமாக பதித்துள்ளார். அதேபோல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சர்வதேச உறவுகளை தனது அரசியல் வரலாற்றின் மூலம் நிலைநிறுத்தியுள்ளார்.

இருப்பினும், உள்நாட்டு அரசியலிலும் கட்சித்தாவல்களின் மூலம் பெரும் சிக்கலை சந்தித்துள்ள சஜித் பிரேமதாச வெளிநாட்டு ரீதியிலான உறவுகளை மேற்கொள்வதில் பின்வாங்கி வருகிறார். இதன் காரணமாக சஜித் அணியின் அரசியல் பிரமுகர்கள் பலர் ரணிலின் பக்கம் படையெடுத்துள்ளனர்.

தேர்தல் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், அமெரிக்காவின் சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் பல விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...