13 22
இலங்கைசெய்திகள்

ரணிலை சந்திக்க மாருதி காரில் மறைந்து சென்ற ஹரின்

Share

ரணிலை சந்திக்க மாருதி காரில் மறைந்து சென்ற ஹரின்

அரகலய என்ற காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்தின் போது ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக தானும் முன்னாள் அமைச்சர் மனுச நாணயக்காரவும்(Manusha Nanayakkara) மாருதி கார் ஒன்றில் மறைந்து சென்றதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) தெரிவித்துள்ளார்

கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றியபோதே ஹரின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டிய நீதிமன்றத் தீர்ப்பால் தாம் கவலைக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தின் போது, தாம் தாக்கப்படலாம் என்ற பயத்தில், ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க மனுச நாணயக்காரவுடன் சேர்ந்து மாருதி காரில் மறைந்த நிலையில் பயணிக்க வேண்டியிருந்தது எனவும் அவர் கூறினார்.

2022 ஆம் ஆண்டு ரணிலின் அமைச்சரவையில் இணைந்து கொள்ள முடிவெடுத்த பின்னர், வீடு தாக்கப்படலாம் என்ற அச்சத்தில், தமது குடும்பத்தை பாதுகாப்பாக அனுப்பியதாகவும் ஹரின் பெர்னாண்டோ மேலும் சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...