2 33
இலங்கைசெய்திகள்

நாட்டில் மாற்றம் கண்டுள்ள அரசியல் நிலை! ரணிலை ஆதரிப்பதில் உறுதி

Share

நாட்டில் மாற்றம் கண்டுள்ள அரசியல் நிலை! ரணிலை ஆதரிப்பதில் உறுதி

2022ஆம் ஆண்டுக்குப் பிறகு பலரால் இங்கு அரசியல் செய்ய முடியாமல் போனது. ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக அரசியல் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கோட்டாபய ராஜபக்சவை(Gotabaya Rajapaksa) ஆட்சிக்குக் கொண்டுவந்தபோது நாங்கள் அதை எதிர்த்தோம். ஆனால் அவரை ஜனாதிபதியாக்க நாட்டு மக்கள் முடிவு செய்தனர். அவரிடம் அரசியல் அனுபவம் இல்லாததால், அவரால் நாட்டை சரியாக நிர்வகிக்க முடியவில்லை.

எனவேதான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் பொருளாதாரத்தை சரியான முறையில் கையாள்வதில் அனுபவம் உள்ள ஒருவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று நாம் கூறுகின்றோம்.

மக்கள் விடுதலை முன்னணியின் பயங்கரவாதத்தால் 2022க்குப் பிறகு பலரால் அரசியல் செய்ய முடியவில்லை. எனினும் இப்போது யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக அரசியல் செய்யலாம் என்ற நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது.

மக்களுக்கு அரசியல் கட்சிகள் தேவையில்லை என்ற நிலையுள்ளது. எனவே, அரசியலை மக்கள் வேறுவிதமாக புரிந்து கொண்டுள்ளனர்.

மக்களின் வித்தியாசமான எண்ணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பது குறித்து கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கலந்துரையாடினோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்பதை அங்கீகரித்தோம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

கடந்த காலத்தில் இந்த நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. எதிர்காலத்திலும் அவருக்கு ஆணை கிடைக்க வேண்டும். அதன்படி அவருக்கு ஆதரவளிக்க முடிவு செய்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...