1 15 scaled
இலங்கை

தேர்தலில் தென்னிலங்கை மக்களின் அமோக ஆதரவு யாருக்கு…? தமிழர்களால் நிராகரிகப்படவுள்ள வேட்பாளர்

Share

தேர்தலில் தென்னிலங்கை மக்களின் அமோக ஆதரவு யாருக்கு…? தமிழர்களால் நிராகரிகப்படவுள்ள வேட்பாளர்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தென்னிலங்கை அரசியல் பரபரப்பு அடைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த நாட்டில் மீண்டும் அரசியல் மோதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. நாளாந்தம் கட்சி தாவும் படலங்களும் இடம்பெற்று வருகிறன.

மும்முனை களமாக ஜனாதிபதி வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர். மக்களால் வெறுக்கப்பட்ட அரசியல் குடும்பமாக ராஜபக்ச குடும்பம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக நாமல் அறிவிக்கப்பட்டுள்ளமை குறித்து அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து சிங்கள மக்கள் மத்தியில் அதிக எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு அரசியல் ராஜதந்திரங்களை மேற்கொண்டு வெற்றியை தனதாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருகிறார்.

எனினும் சிங்களவர்கள் மத்தியில் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் அனுரகுமார திசாநாயக்கவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொழும்பு உள்ளிட்ட சில நகரங்களில் ரணிலுக்கான ஆதரவு மேலோங்கியுள்ள போதும், கிராமபுற மக்கள் மத்தியில் அவர் தோல்வி அடைந்த நபராகவே உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகளை புரிந்து கொள்ளாத மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுரகுமார திசாநாயக்கவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.

அதேபோன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியாளர்கள் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ள பெரும்பான்மையின மக்கள் சஜித் பக்கம் தாவியுள்ளதாக நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதேவேளை சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவு சஜித்திற்கே கிடைக்க வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டாலும் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள கடும் அதிருப்தி நிலையே இதற்கு பிரதான காரணமாகும்.

Share
தொடர்புடையது
1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...

Image 2025 08 41e4a2510e8ad510f382097329a712cd 16x9 1
செய்திகள்இலங்கை

இலங்கை கண் தானம் உலக சாதனை: 2.28 மில்லியனுக்கும் அதிகமானோர் உறுதியளிப்பு!

இலங்கையின் நீண்டகால மனிதாபிமான முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2.28 மில்லியனுக்கும் அதிகமான...

articles2F27jvfekTpzayau9faoUh
செய்திகள்இலங்கை

இலங்கை யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவை அறிமுகம்: இந்திய மொபைல் எண்ணின்றிப் பணம் செலுத்த வசதி!

இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை பௌத்த யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான...

images 2 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு: டென்மார்க்குடன் இலங்கை இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து – 39 மில்லியன் டாலர் கடன் நிவாரணம்!

நடந்து வரும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசு டென்மார்க் அரசுடன்...