அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த அநுர

Share
tamilni 87 scaled
Share

ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த அநுர

அடுத்த வருடம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் இல்லையேல் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற புலம்பெயர்ந்த இலங்கையர்களுடனான சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது. எனினும் மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் நியமிக்கப்படும் ஜனாதிபதியே பயன்படுத்த வேண்டுமென அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபையின் நிர்வாகத்தை ஆணையாளரின் கீழும் மாகாண சபைகளை ஆளுநர் நிர்வாகத்தின் கீழும் கொண்டு வர முடியும்.

எனினும் மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியே அதனை மேற்கொள்ள முடியும்.

எனவே ஜனாதிபதி தேர்தலை அடுத்த வரும் ஒக்டோபர் 17ஆ;ம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும். தேர்தல் நடத்தப்படாது என்ற சமிக்ஞை கிடைத்தால், மக்கள் வீதியில் இறங்குவார்கள் என்று அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
2 16
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சி ஆதிக்கம்! யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர...

2 16
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அமோக வெற்றி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச...

2 15
இலங்கைசெய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் பெரும் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...

2 16
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்! அதிக ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...