12
இலங்கைசெய்திகள்

டக்ளஸின் ஆதரவை நாடும் தமிழ்கட்சிகள்! இன்று இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பு

Share

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்குச் சின்னக் கட்சியும்), அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (சைக்கிள் சின்னக் கட்சி), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ்த் தேசியப் பேரவையும் கொள்கை ரீதியாக தங்களுக்கு இடையில் கூட்டு அமைத்து உடன்பாடு கண்டிருக்கின்றன எனப் பகிரங்க அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், மேற்படி தரப்புக்கள் உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களைக் கைப்பற்றுவதற்காக ஆதரவு கேட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பியின்) தலைவர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.

யாழ். சுன்னாகம் – கந்தரோடையில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் இல்லத்தில், பெரும்பாலும் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் பங்குபற்றுவார் எனத் தெரியவந்துள்ளது.

”சித்தார்த்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் நேற்று செவ்வாய்க்கிழமை என்னைத் தேடி வந்து எங்கள் யாழ். அலுவலகத்தில் சந்திக்க விரும்பினர். இல்லை, நான் உங்களை வந்து சந்திக்கின்றேன் என்று பதிலளித்து அங்கு சென்று சந்திக்க இருக்கின்றேன்.

என்னவாயினும் அவர்கள் என் பழைய நண்பர்கள். எங்களுக்குள் தொடர்புகள் இருக்கின்றனதானே?” – என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில், மேற்படி சங்கு – சைக்கிள் கூட்டணியின் வேறு பிரமுகர்கள் பங்குபற்றுவார்களா என்பது தெரியவில்லை.

கொள்கை ரீதியில் சங்கும் சைக்கிள் தரப்பும் ஒன்றிணைந்து விட்டமையால் சைக்கிள் தரப்பின் இணக்கத்தோடுதான் உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகத்தை அமைக்க ஆதரவு கேட்கும் இந்த முயற்சியை சித்தார்த்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் முன்னெடுக்கின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Gov Pay 1200x675px 20 10 25 1000x600 1
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் புரட்சி: 2 பில்லியன் ரூபா மைல்கல்லை எட்டியது GovPay!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ டிஜிட்டல் கட்டணத் தளமான GovPay, 2025 ஆம் ஆண்டில் 2 பில்லியன்...

25 6944be9469388
செய்திகள்உலகம்

பங்களாதேஷ் வன்முறை: இந்து இளைஞர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது – முகமது யூனுஸ் அறிவிப்பு!

பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற வன்முறையின் போது இந்து இளைஞர் ஒருவர் கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட சம்பவம்...

44518c6422f6643ec9efe122a04bc788
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கைக்குக் கைகொடுத்த ஐக்கிய அரபு இராச்சியம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உருக்கமான நன்றி!

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கிய...

images 2 6
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டியில் நாளை பாரிய போராட்டம்: சட்டவிரோத விகாரை என அறிவிப்புப் பலகை நடவும் தீர்மானம்!

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாகக் கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராகவும், அதன்...