12
இலங்கைசெய்திகள்

டக்ளஸின் ஆதரவை நாடும் தமிழ்கட்சிகள்! இன்று இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பு

Share

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்குச் சின்னக் கட்சியும்), அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (சைக்கிள் சின்னக் கட்சி), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ்த் தேசியப் பேரவையும் கொள்கை ரீதியாக தங்களுக்கு இடையில் கூட்டு அமைத்து உடன்பாடு கண்டிருக்கின்றன எனப் பகிரங்க அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், மேற்படி தரப்புக்கள் உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களைக் கைப்பற்றுவதற்காக ஆதரவு கேட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பியின்) தலைவர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.

யாழ். சுன்னாகம் – கந்தரோடையில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் இல்லத்தில், பெரும்பாலும் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் பங்குபற்றுவார் எனத் தெரியவந்துள்ளது.

”சித்தார்த்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் நேற்று செவ்வாய்க்கிழமை என்னைத் தேடி வந்து எங்கள் யாழ். அலுவலகத்தில் சந்திக்க விரும்பினர். இல்லை, நான் உங்களை வந்து சந்திக்கின்றேன் என்று பதிலளித்து அங்கு சென்று சந்திக்க இருக்கின்றேன்.

என்னவாயினும் அவர்கள் என் பழைய நண்பர்கள். எங்களுக்குள் தொடர்புகள் இருக்கின்றனதானே?” – என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில், மேற்படி சங்கு – சைக்கிள் கூட்டணியின் வேறு பிரமுகர்கள் பங்குபற்றுவார்களா என்பது தெரியவில்லை.

கொள்கை ரீதியில் சங்கும் சைக்கிள் தரப்பும் ஒன்றிணைந்து விட்டமையால் சைக்கிள் தரப்பின் இணக்கத்தோடுதான் உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகத்தை அமைக்க ஆதரவு கேட்கும் இந்த முயற்சியை சித்தார்த்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் முன்னெடுக்கின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...