tamilni 173 scaled
இலங்கைசெய்திகள்

மீண்டும் அரசியல் களம்! தயாராகும் கோட்டாபய

Share

மீண்டும் அரசியல் களம்! தயாராகும் கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரத் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி விலகியதில் இருந்து மௌனத்தை கடைப்பிடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது தோல்வியடைந்த தனது பிம்பத்தை மீண்டும் கைப்பற்றி வலுப்படுத்த கோட்டாபய முனைந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் அரசியலில் பிரவேசிப்பதாக அறிவித்த அவரது நெருங்கிய உதவியாளரும் ஊடக உரிமையாளருமான ஒருவரால் தற்போது புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதற்குள் தனது பிம்பத்தை மாற்ற அவர் திட்டமிட்டுள்ளார்.

மக்களால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதிலும் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அனைத்து சலுகைகளையும் வசதிகளையும் பெற்ற கோட்டாபய ராஜபக்ச, அண்மையில் தனது நெருங்கிய உதவியாளரான திலித் ஜயவீரவினால் தலைமைத்துவம் ஏற்கப்பட்ட மௌபிம ஜனதா கட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

திலித் ஜயவீர கட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் மௌபிம ஜனதா கட்சி தனது அரசியலமைப்பை மாற்றியமைத்து புதிய நிர்வாகிகளை தெரிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்சி இப்போது புதிய உறுப்பினர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளது.

கோட்டாபய ராஜபக்சவின் வியத்மக அமைப்பு போன்ற கட்டமைப்பை உருவாக்கி தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தகர்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
05
செய்திகள்அரசியல்இலங்கை

26,000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி! – MAS நிறுவன ஆலைகள் மூடல் குறித்து சஜித் பிரேமதாச கடும் கவலை!

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள MAS Holdings நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள்...

04
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் கோர விபத்து: ஏர் அம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியது – நோயாளி, மருத்துவர் உட்பட 7 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ரெட் பேர்ட் ஏர்வேஸ்...

01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். சர்வதேச விமான நிலையம்: பெரிய ரக விமானங்கள் தடையின்றி தரையிறங்கப் போகிறது!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை (JIA) சர்வதேச தரத்திற்கு உயர்த்தி, பெரிய ரக பயணிகள் விமானங்களை...

IMG 0771
செய்திகள்இந்தியா

நிலத் தகராறில் இரட்டை கொலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நிலத் தகராறு காரணமாக இரண்டு சகோதரர்களைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில்,...