24 660a1d155a5f5
இலங்கைசெய்திகள்

நாமலை கைவிட்ட தென்னிலங்கை அரசியல்வாதிகள் – அதிர்ச்சியில் ராஜபக்ச குடும்பம்

Share

நாமலை கைவிட்ட தென்னிலங்கை அரசியல்வாதிகள் – அதிர்ச்சியில் ராஜபக்ச குடும்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (Sri Lanka Podujana Peramuna) கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) நியமிக்கப்பட்டமை கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தங்காலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தை இறுதி நேரத்தில் புறக்கணித்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

மகிந்தவின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) ஆகியோரும் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

கடந்த 29ஆம் திகதி இரவு, அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என ஊடகங்களுக்கு தெரிவித்தனர். முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என தெரிவித்துள்ளனர்.

அதனை பகிரங்கமாக அறிவிக்காத பொதுக் கூட்டங்களில் அவர்கள் பங்கேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) பொதுஜன பெரமுன கட்சியின் பொதுவேட்பாளராக முன்னிறுத்த முடியும் என அவர் வலியுறுத்திள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சி முழுமையாக நாமலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சிரேஷ்ட உறுப்பினர்கள் ரணிலின் பக்கம் தாவியுள்ளமை ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...