இலங்கைசெய்திகள்

பசிலின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்கள்!

Share
பசிலின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்கள்!
பசிலின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்கள்!
Share

பசிலின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்கள்!

கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பசில் ராஜபக்ச கூட்டிய கூட்டத்திற்கு பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட தலைவர்கள் பிரசன்னமாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் இல்லத்தில் கடந்த 12ஆம் திகதி இந்த கூட்டம் நடத்தப்பட்டிருந்தது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்வரும் அரசியல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்ககாக இந்த விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பசில் ராஜபக்சவின் பணிப்புரைக்கமைய செயலாளர் நாயகம் சாகர காரியவசத்தினால் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கூட்டத்தில் நாமல் ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தார்.

எனினும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம மற்றும் அனுராத ஜயரத்ன ஆகியோர் இந்த சந்திப்பை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த அரசியல் தலைவர்கள் பங்கேற்காததால், எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மீண்டுமொரு கலந்துரையாடலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...