tamilnid 9 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

அமைச்சு பதவிகள் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் கடும் போட்டி

Share

அமைச்சு பதவிகள் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் கடும் போட்டி

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அமைச்சு பதவியொன்றை பெற்று விட வேண்டும் என்பதில் ஆளுங்கட்சிக்குள் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் தற்போதையை அமைச்சரவையை மாற்றி புதியவர்கள் சிலரை உள்வாங்குவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போதைக்கு ஆலோசித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த அமைச்சரவை மாற்றத்தின் போது தாமும் அமைச்சு பதவியொன்றை பெற்றுவிட வேண்டும் என்பதில் ஆளுங்கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் மட்டுமன்றி, முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவான சிலரும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

எனினும் தற்போதைய நிலையில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படும் வஜிர அபேவர்த்தன, பௌசி ஆகியோருக்கு மட்டுமே அமைச்சு பதவிகள் குறித்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சு பதவியொன்றை ஏற்பது தொடர்பில் பௌசி இதுவரை எதுவித தீர்மானங்களையும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

Share
தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...