tamilni 275 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுக்கும் பஸிலுக்கும் சஜித் சவால்

Share

ரணிலுக்கும் பஸிலுக்கும் சஜித் சவால்

வாய்ச்சவடால் விட வேண்டாம் துணிவு இருந்தால் தேர்தல் ஒன்றை உடனடியாக நடத்திக் காட்டுங்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்சவுக்கும் சவால் விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

‘நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு செல்லத் திரைமறைவில் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகும்’ என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களையும் எந்நேரமும் எதிர்கொள்ள மொட்டுக் கட்சி தயாராகவுள்ளது என்று பஸில் ராஜபக்ச கூறியிருந்தார்.

மேற்படி இருவரினதும் கருத்துக்களுக்குச் சஜித் பிரேமதாஸ பதில் வழங்கும்போது,

“தேசிய ரீதியில் தேர்தல் ஒன்று நடந்தால் ரணில் – மொட்டு அரசு கவிழ்வது உறுதி. இதைச் சமாளிக்கவே ஜனாதிபதி ரணிலும், மொட்டுவின் உரிமையாளர் பஸிலும் வாய்ச்சவடால் விடுகின்றனர்.

அவர்களிடம் நாம் கேட்டுக்கொள்வது என்னவெனில், வாய்ச்சவடால் விட வேண்டாம்; துணிவு இருந்தால் தேர்தல் ஒன்றை உடனடியாக நடத்திக் காட்டுங்கள். அந்தத் தேர்தலில் இவர்களின் முகத்திரை கிழியும். மக்களின் ஆணை எமக்குக் கிடைக்கும் என குறிப்பிட்டார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 11
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு ஊழல்: முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ‘எயார்பஸ்’ (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி...

15 11
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: FBI அறிக்கையை மேற்கோள் காட்டி சஞ்சீவ எதிரிமான்ன விளக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்குத் தேவாலயங்களைக் காட்ட சுரேஷ் சலே போன்ற ஒருவரின் உதவி...

14 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்: இயந்திரங்களுக்குச் சேதமில்லை என கோப் (COPE) குழு உறுதி!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியினால், அங்குள்ள மின் உற்பத்தி...

13 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மொரட்டுவையில் திருமண நாளன்று இளைஞர் கொலை: மூவர் கைது!

மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி இளைஞர் ஒருவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை...