25 688e11fb14f86
இலங்கைசெய்திகள்

சாரதிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள eTraffic App.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இலங்கை பொலிஸ் திணைக்களம் Sri Lanka Police eTraffic App ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை பொதுமக்களில் 13000 பேர் இந்த Sri Lanka Police eTraffic Appயை தரவிறக்கம் செய்துள்ளதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் எப்.யு. வுட்லர் (F.U. Wootler) தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற போக்குவரத்து தொடர்பான ஊடக மாநாட்டில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்களில் அதிகளவான பொது மக்கள் மரணிப்பது அதிகரித்துள்ளது.

பொதுவாக கொழும்புக்கு வெளியில் இடம்பெறும் விபத்துக்களில் மரணிப்போரின் வீதம் அதிகரித்துள்ளது. இதற்கு அதிக வேகம் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படுகிறது.

ஆகையால் அனைவரும் குறித்த Appயை தரவிறக்கம் செய்து நீங்கள் வீதியில் நடந்து செல்லும் போது அல்லது வாகனத்தில், பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது அதிக வேகமாக அல்லது போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்களின் அல்லது சாரதிகளின் காணொளி, புகைப்படம் ஒன்றை எடுத்து இந்த Appயில் தரவேற்றம் செய்தால் பொலிஸ் அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Share
தொடர்புடையது
images 10 1
செய்திகள்இலங்கை

இரண்டு நாட்களில் 581 நோயாளர்கள்: இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரம் – மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன்...

1200 675 25395250 thumbnail 16x9 1
செய்திகள்உலகம்

சிறுவர்களுக்கு எதற்கு இரத்த அழுத்தம்? இருபது ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு கடந்த இருபது ஆண்டுகளில் இருமடங்காக...

images 12
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறைச்சாலை போதைப்பொருள் வலைப்பின்னல்: மஹர முன்னாள் களஞ்சியக் காப்பாளரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

சிறைச்சாலையில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது...

c062bcf6aceaa92908367ec4a579f375a27fd715ccd5277c234a953549da3bc8
உலகம்செய்திகள்

மதுரோவை உடனடியாக விடுதலை செய்: அமெரிக்காவின் நடவடிக்கையை மேலாதிக்கச் செயல் எனச் சீனா சாடல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கைது செய்துள்ளமைக்குச் சீனா தனது...