tamilni 393 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் துப்பாக்கி சூடு

Share

தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் துப்பாக்கி சூடு

அக்குரஸ்ஸ தெடியகல பிரதேசத்தில் வீடொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த பெண் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் அக்குரஸ்ஸ தெடியகல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் எனவும், தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த பெண்ணின் சகோதரியின் கணவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அக்குரஸ்ஸ தீகல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேகநபர், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியுடன் நேற்று இரவு அக்குரஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காட்டுப்பகுதி ஒன்றில் மறைந்திருந்த நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...