tamilni 102 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மீண்டும் டெங்கு நோய் பரவக்கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது.

இந்த வருடத்தில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 30,300 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

கடும் மழை காரணமாக பாடசாலை மாணவர்களிடையே டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாகவும், முடிந்தவரை சுற்றுப்புறங்களை சுத்தம் செய்து டெங்கு இல்லாத பிரதேசமாக மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் சுமார் 20 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் தற்போது பாடசாலை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் அவர்கள் இது தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி முதல் செப்டெம்பர் வரை நாடளாவிய ரீதியில் 62,254 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், மொத்த நோயாளர்களில் 30,355 பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 13,218 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 13,105 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 4,032 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரிகளை தொற்றுநோயியல் திணைக்களம் அடையாளம் கண்டுள்ளதாகவும், இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....