tamilni 368 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் மரணங்களின் பின்னணியில் கோவிட் தடுப்பூசி

Share

இலங்கையில் அதிகரிக்கும் மரணங்களின் பின்னணியில் கோவிட் தடுப்பூசி

இலங்கையில் மாரடைப்பால் இறப்பவர்களில் பெரும்பாலானோர் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் தான் என்ற வதந்திகளில் உண்மையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மருந்துகள் மற்றும் பல்வேறு நோய்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பல குழுக்களில் அங்கம் வகிக்கும் இலங்கை மருத்துவ சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணரான ஆனந்த விஜேவிக்ரம, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், அந்த தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு பல்வேறு சிக்கல்களின் சாத்தியம் மிகக் குறைவு என தெரிவித்துள்ளார்.

அந்த தடுப்பூசிகளை பெறாதவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் தொற்றுக்குள்ளாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவது மிகவும் குறைவு. தடுப்பூசி பெறாமல் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கே இவ்வாறான பாதிப்புகள் அதிகமாக உள்ளது.

தடுப்பூசியால் நன்மையே தவிர எவ்வித தீமையும் இல்லை. இந்நாட்டில் தடுப்பூசிகளுக்கு எதிரான ஒரு குழுவினர் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை செய்து வருகின்றனர். அவர்கள் கோவிட் தடுப்பூசி மாத்திரமின்றி அனைத்து தடுப்பூசிகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புகைபிடித்தல், உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் மனஅழுத்தம் ஆகியனவே இதயநோய்களுக்கு பிரதான காரணமாக அமைவதாக களுத்துறை பொது வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணரான வைத்தியர் பத்திய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம் காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் சிறுவயதிலேயே மாரடைப்புக்கு முகங்கொடுக்கும் அபாயத்தை தவிர்க்க முடியும் என களுத்துறை பொது வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் பத்திய ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....