18 12
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

Share

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி விசேட அமைச்சரவை கூடி கடவுச்சீட்டு தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.

புதிய வழங்குனர் ஒருவரிடமிருந்து 750,000 புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலுக்கு கடந்த அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.

அதே நிறுவனத்திடம் இருந்து சாதாரண கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு முன்னாள் அமைச்சரவை தீர்மானித்தது, ஆனால் அதற்கு முன்னர் வழங்கிய வழங்குனர்கள், அவர்களின் ஒப்பந்தத்தின்படி கடவுச்சீட்டு அச்சிடுவதற்கு உரிமையுடையவர் என்பதால் பிரச்சினைகள் ஏற்பட்டது.

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு 750,000 கடவுச்சீட்டுகளை வாங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், முந்தைய வழங்குனர் ஒரு குறிப்பிட்ட விலையில் கடவுச்சீட்டுகளை அச்சிட நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். மேலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது முந்தைய வழங்குனரை தேவையான கடவுச்சீட்டுகளை தொடர்ச்சியாக வழங்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய கடவுச்சீட்டு வழங்கும் பணி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், இந்த நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...