இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

Share
3 35
Share

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

நாட்டில் கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு படிப்படியாகத் தீர்வு வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

 

இதனால், மக்கள் கலவரமடையத் தேவையில்லை, தற்போது கடவுச்சீட்டுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நேற்று (22) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும் கூறியதாவது, கடவுச்சீட்டு பிரச்சினை கடந்த அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டதாகும். அந்த அரசாங்கத்தால் விலைமனு வழங்கப்பட்ட நிறுவனம் உரிய நேரத்தில் கடவுச்சீட்டுகளை விநியோகிக்கவில்லை.

 

எவ்வாறிருப்பினும், நாம் அந்தப் பிரச்சினைக்கு தீர்வினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட தவறை சரி செய்வதற்காக நாம் தற்போது பாடுபட்டு வருகின்றோம்.

 

கடந்த சனிக்கிழமை 7,500 கடவுச்சீட்டுகள் கிடைக்கப்பெற்றன. புதன்கிழமை 42,000 கடவுச்சீட்டுகள் கிடைக்கப்பெறவுள்ளன.

 

எனவே மக்கள் கலவரமடையத் தேவையில்லை. தற்போது கடவுச்சீட்டுக்கு தட்டுப்பாடு இல்லை.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...