tamilni 372 scaled
இலங்கைசெய்திகள்

தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட ஐயாயிரம் சிறுமிகள்

Share

தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட ஐயாயிரம் சிறுமிகள்

இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் நான்கு ஆண்டுகளுக்குள் சொந்த விருப்பத்தின் பேரில் தகாத செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அண்மைய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கண்டி தேசிய மருத்துவமனையின் மருத்துவ கலாநிதி பாலித பண்டார சுபசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் உள்ள 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தகாத செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக 6,307 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றில் 5,055 முறைப்பாடுகள் குறித்த சிறுமிகளின் சம்மதத்துடன் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பானது என மருத்துவ கலாநிதி பாலித பண்டார குறிப்பிட்டுள்ளார்.

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 பொலிஸ் பிரிவுகளில் கடந்த மூன்று வருடங்களாக 16 வயதுக்குட்பட்ட 132 சிறுமிகள் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் அவர்களது சம்மதத்துடன் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சுபசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...