5 10
இலங்கைசெய்திகள்

இரட்டை வேடம் போடும் ஜனாதிபதி அநுர : சஜித் சாடல்

Share

இரட்டை வேடம் போடும் ஜனாதிபதி அநுர : சஜித் சாடல்

ஆட்சிக்கு வர முன்னர் ஒரு கதையும் ஆட்சிக்கு வந்தவுடன் வேறு கதையையும் ஜனாதிபதிக் கூறிக்கொண்டிருக்கிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “அநுரகுமார திஸாநாயக்க எனும் ஜனாதிபதி வேட்பாளருக்கும், அநுரகுமார திஸாநாயக்க என்ற ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இதனால் நாட்டு மக்கள் இன்று நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளார்கள்.

ஜனாதிபதி தேர்தல் மேடையில் அவர் என்ன கூறினார். 6 மாதங்களுக்கு ஒரு தடவை அரச உத்தியோகஸ்தர்களின் சம்பளத்தை உயர்த்துவதாகக் கூறினார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதாகக் கூறினார்.

மின்கட்டணம், நீர்க்கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறினார். கடவுச்சீட்டு வரிசையை இல்லாதொழிப்பதாகக் கூறினார்.

இவ்வாறு கூறிய ஒரு வாக்குறுதியையேனும் ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளாரா?

இதிலிருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் இரட்டை நாக்கு அரசியல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வாக்கு எடுக்க ஒரு கதையும் வாக்கு எடுத்து அதிகாரத்திற்கு வந்தவுடன் இன்னொரு செயற்பாட்டையும்தான் ஜனாதிபதி செய்து வருகிறார்.

ஐ.எம்.எப். இற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜனாதிபதி, இன்று ஐ.எம்.எப். இன் கைப்பாவையாக மாறியுள்ளார்” என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...