இலங்கைசெய்திகள்

2005இல் மகிந்த ஜனாதிபதியாவதற்கு யார் காரணம்: அம்பலமாகும் உண்மைகள்..!

Share
3 9
Share

2005இல் மகிந்த ஜனாதிபதியாவதற்கு யார் காரணம்: அம்பலமாகும் உண்மைகள்..!

கடந்த 2005ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றமைக்கு பிண்ணனியில் வன்னி மாவட்ட வேட்பாளர் எமில்காந்தன் பெரும் பங்காற்றியதாக ஒரு தகவல் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தலின் போதான சம்பவங்களில் தனது பங்கு இல்லை எனவும், அதற்கு அக்காலப்பகுதியில் இருந்த இரு முக்கிய பலம் பொருந்திய தரப்புகளாலும் இராஜதந்திர தரப்புகளாலும் எடுக்கப்பட்ட முடிவுகளே அவை என எமில்காந்தன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அக்காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பால் பகிஷ்கரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட முன்னர், சுனாமி நிதியத்திற்கு வந்திருந்த பெரும்பாலான நிதியில் ஒரு பெரும் தொகை தம்மூடாக வழங்கப்பட்ட பின்னரே விடுதலை புலிகள் அமைப்பு பகிஷ்கரிப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், கடந்த 30 வருடங்களுக்கு மேற்பட்ட யுத்த காலத்தில் வடக்கு – கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாக கட்டமைப்பு அதாவது அரச கட்டமைப்பு தான் செயற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...