2 11
இலங்கைசெய்திகள்

அநுர தரப்பு வெளியிட்டுள்ள அபார நம்பிக்கை!

Share

அநுர தரப்பு வெளியிட்டுள்ள அபார நம்பிக்கை!

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சிக்கு கிடைத்த வாக்குகளை விடவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட வேட்பாளர் வசந்த சமரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகளை விடவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூடுதல் வாக்குகளை மக்கள் அளிப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கம் தொடர்பில் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் செய்து வரும் பிரசாரத்தில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய நாடாளுமன்றின் அமைச்சரவை எதிர்வரும் 17ஆம் அல்லது 18ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் என வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்பும் அமைச்சரவை அதுவே என அவர் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 1 4
செய்திகள்இலங்கை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீதான ஊழல் வழக்கு: கையடக்கத் தொலைபேசி கட்டணம் மோசடி – சாட்சிப் பதிவு நிறைவு, மேலதிக விசாரணை டிசம்பர் 9க்கு ஒத்திவைப்பு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட இரு பிரதிவாதிகளுக்கு...

image 87489e8d1f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை முத்து நகரில் 42 நாட்களான சிசு உயிரிழப்பு: பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைப்பு – காவல்துறையினர் விசாரணை!

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களேயான சிசு ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா காவல்துறையினர்...

20251107025546 hhh
செய்திகள்உலகம்

16,000 அடிகள் நடந்ததாகக் குற்றம்சாட்டிப் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சீனாவில், கால் வலியால் விடுப்பில் இருந்த ஊழியர் ஒருவர், ஒரு நாளில் 16,000 ‘அடிகள்’ (Steps)...