1 69
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ள உறுதி மொழி

Share

அநுர அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ள உறுதி மொழி

ஒட்டுமொத்த இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு எதிராக ஒருபோதும் செயற்பட மாட்டோம் என்ற உறுதிப்பாட்டை தமது அரசாங்கம் வழங்குவதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடக்கு தெற்கு என்ற வேறுபாடு இன்று நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்துள்ளனர். குறிப்பாக வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மாவட்டமாக யாழ்ப்பாணத்தை மாற்றியுள்ளனர். விசேடமாக இதற்காக அந்த மக்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றி ன்பது சவால் மிக்கதொரு வெற்றியாகும். பாரம்பரியமாக ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்திருந்த கட்சிகளை புறந்தள்ளி மக்கள் எம்மை ஆதரித்துள்ளனர்.

எனவே மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு எதிராக ஒருபோதும் செயற்பட மாட்டோம் என்ற உறுதிப்பாட்டை வழங்குகின்றோம்.

அதேபோன்று கடந்த 76 வருடங்களாக இலங்கையில் இருந்த ஆட்சியாக எமது ஆட்சி இருக்காது என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை நாங்கள் முன்னெடுப்போம். கடினமன பாதைகளை நடந்து மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை என்பது மாற்றத்திற்கான பிரதிபலிப்பாகவே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...