12 21
இலங்கைசெய்திகள்

புதிய அரசமைப்பு நிச்சயம் : அநுர அரசு உறுதி

Share

புதிய அரசமைப்பு நிச்சயம் : அநுர அரசு உறுதி

இலங்கையில் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த விடயத்தில் அரசு எந்த விதத்திலும் பின்வாங்காது என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன(Namal Karunaratna) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

நாட்டில் தற்போதுள்ள அரசமைப்புக்குப் பதிலாக புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மக்கள் ஆணையும் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே, அந்த உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும்.

புதிய அரசமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படும். நாட்டில் இதுவரை இயற்றப்பட்ட அரசமைப்புகளின்போது மக்களின் கருத்துகள் உள்வாங்கப்படவில்லை.

எம்மால் கொண்டுவரப்படும் அரசமைப்பு மக்கள் அனுமதி கிடைத்ததாக இருக்க வேண்டும். அதற்குரிய பணிகளுக்காகவே மூன்று வருடங்கள் என கால எல்லை குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

கடந்த கால யோசனைகளும் உள்வாங்கப்பட்டு எவ்வளவு சீக்கரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதனைச் செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். சிலவேளை மூன்று வருடங்களுக்கு முன்னர்கூட அது நடக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...