3 41
இலங்கைசெய்திகள்

சுற்றுலா எச்சரிக்கை ஆலோசனைகளை நீக்கும் முயற்சியில் இலங்கை

Share

சுற்றுலா எச்சரிக்கை ஆலோசனைகளை நீக்கும் முயற்சியில் இலங்கை

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைத் தாக்கும் திட்டம் முறியடிக்கப்பட்டமை தொடர்பான தகவல்களுடன், வெளிநாடுகளின் பயண எச்சரிக்கை ஆலோசனைகளை அகற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் (Sri Lanka Government) வெளிநாட்டு இராஜதந்திர பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த வெளிநாடுகளின் ஆலோசனைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அகற்றப்படும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைத் தாக்கும் திட்டம் குறித்து, அரசாங்கத்திற்கு உளவுத்துறை கிடைத்ததிலிருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை, எனினும் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் வெளிநாட்டு தூதரகங்களுடன் கலந்துரையாடியதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி அமெரிக்கா, இஸ்ரேல், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு அந்த நாடுகளின் பிரஜைகளுக்கான பாதுகாப்பு குறித்து இலங்கை உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 6
செய்திகள்உலகம்

அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் துல்லியமான மாற்றங்களை அறிய புதிய MRI ஸ்கேனை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் புதிய MRI இமேஜிங்...

25 67a81aa32df3b
செய்திகள்இலங்கை

பாடப்புத்தக அச்சிடும் பணி நிறுத்தப்படவில்லை – கல்வி அமைச்சு விளக்கம்!

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில...

20250908031349
செய்திகள்இலங்கை

“ஹரக் கட்டா”வின் பாதுகாப்பு செலவு மாதத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி முறையீடு!

பாதாள உலகத் தலைவரான நதுன் சிந்தக, ‘ஹரக் கட்டா’ என்றும் அழைக்கப்படுபவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

25 68f75f57333cd
செய்திகள்இலங்கை

ருஹுணு விவசாய பீட மோதல்: 21 மாணவர்கள் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ருஹுணு பல்கலைக்கழக விவசாய...