rtjy 169 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஆபத்தான இருவர் தப்பியோட்டம்

Share

இலங்கையில் ஆபத்தான இருவர் தப்பியோட்டம்

இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமாவை காலி நகர மையத்தில் வைத்து சுட்டுக் கொன்ற சுஜீ கொஸ்கொடவின் உதவியாளர்கள் இருவரும் இரகசியமாக வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டி. வி. சானக்கவின் மாமனாரை கொன்ற பின்னர் கொஸ்கொட சுஜி துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரையும் டுபாய் நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

காலி நகரின் பிரபல வர்த்தகரான 60 வயதான லலித் வசந்த, இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், காலி பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும், சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

விசாரணைகளின் போது, ​​கொல்லப்பட்ட லலித் வசந்த, ரத்கம விதுர என்ற பாதாள உலகத் தலைவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணமெனவும் தெரியவந்துள்ளது.

காலி நகரில் உள்ள தனது ஆடை கடையில் பணியை முடித்துக் கொண்டு காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இரு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் லலித் வசந்தவை டி56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Share
தொடர்புடையது
1732463885 students in flood 6
செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை பாதிப்பு: 18 மாவட்டங்கள் பாதிப்பு; மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக, 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது....

MediaFile 7
இலங்கைசெய்திகள்

புழல் சிறையில் உள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க...

image 5b342b3cea
செய்திகள்இலங்கை

வங்கக்கடல் வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாகப்பட்டினம் – இலங்கை (காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல்...

srilankan airline 300x157 1
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி பிரஜை கைது

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்...