sri lanka flag on map scaled
இலங்கைசெய்திகள்

உள்ளகக் கடன்மறுசீரமைப்பு விவகாரத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுங்கள்- இலங்கை வர்த்தகப்பேரவை வேண்டுகோள்

Share

உள்ளகக் கடன்மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பில் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறும், முன்மொழியப்படும் கடன் மறுசீரமைப்புச் செயன்முறை குறித்த இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படும்வரை காத்திருக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும், சம்பந்தப்பட்ட ஏனைய சகல தரப்புக்களிடமும் இலங்கை வர்த்தகப்பேரவை வேண்டுகோள்விடுத்துள்ளது.

இவ்வார இறுதியில் கடன்மறுசீரமைப்பு செயன்முறை குறித்த யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் நிலையில், இதுகுறித்து இலங்கை வர்த்தகப்பேரவையினால் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் மீது நம்பிக்கை வைப்பதும், பொறுமையைக் கடைப்பிடிப்பதும் அவசியம் என்பதை வலியுறுத்துகின்றோம். இலங்கை மத்திய வங்கியினால் கூறப்பட்டவாறு நிதியியல் முறைமை உறுதிப்பாட்டைப் பேணுவதிலும், பணத்தை வைப்புச்செய்தவர்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதிலுமே விசேட கவனம் செலுத்தப்படவேண்டும்.

அதேவேளை கடன்மறுசீரமைப்பு தொடர்பில் முன்மொழியப்படும் செயற்திட்டத்தை ஆரோக்கியமான கலந்துரையாடல்களின் அடிப்படையில் முழுமையாக ஆராய்வதற்கு நாமனைவரும் கூட்டிணைந்து இடமளிப்பது இன்றியமையாததாகும். அதனூடாக மாத்திரமே அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைந்துகொள்ளமுடியும்.

எனவே பொறுப்புணர்வுடன் செயற்படும் அதேவேளை, முன்மொழியப்படும் கடன் மறுசீரமைப்புச் செயன்முறை குறித்த இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படும்வரை காத்திருக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும், சம்பந்தப்பட்ட ஏனைய சகல தரப்புக்களிடமும் வலியுறுத்திக்கேட்டுக்கௌ;கின்றோம். இது கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான ஒட்டுமொத்த செயற்திட்டத்தின் மிகமுக்கிய படிமுறை என்பதுடன், அதனுடன் தொடர்புடைய ஏனைய முக்கிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு உதவும்.

இலங்கையின் உள்ளகக் கடன்களை மறுசீரமைப்புச் செய்வதற்கான உத்தேசம் குறித்து அரசாங்கம் அறிவித்ததிலிருந்து இதுபற்றிய பல்வேறு கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டுவருகின்றன. நாம் இக்கரிசனைகளைப் புரிந்துகொள்வதுடன் இதுபற்றிய வெளிப்படைத்தன்மைவாய்ந்த கலந்துரையாடலுக்கான உரிமையையும் ஏற்றுக்கொள்கின்றோம். இருப்பினும் கடன்மறுசீரமைப்புடன் தொடர்புடைய சந்தையின் துலங்கல்கள் குறித்து நாம் அவதானத்துடன் இருக்கும் அதேவேளை, இதுபற்றிய தவறான தகவல்கள் பகிரப்படுவதையும் நிறுத்தவேண்டும். ஆகவே நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு இதில் தொடர்புபட்டிருக்கும் அனைத்துத்தரப்பினரும் உரியவாறு செயற்படுவார்கள் என்று நம்புகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...