3 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மீண்டும் வரிசை யுகம்

Share

இலங்கையில் மீண்டும் வரிசை யுகம்

இலங்கையில் கோட்டாபயவின் (gotabaya rajapaksa)ஆட்சிக்காலத்தில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏறபட்டு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் நாளாந்தம் மக்கள் பொருட்கள் வாங்க வரிசையில் நின்றனர்.

ஆனால் அந்த வரிசை யுகத்தை ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) இல்லாதொழிததார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் வரிசை யுகம் ஆரம்பித்துள்ளது. அதுவும் அநுர குமாரவின் (anura kumara dissanayake)ஆட்சிக்காலத்தில்.

முன்னார் தேங்காய் விலை உயர்வு மற்றும் கடும் தட்டுப்பாடு காரணமாக கட்டுப்பாட்டு விலையில் அதனை வழங்குவதற்காக அரசாங்கம் தேங்காய்களை வழங்கியபோது அதனை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

தற்போது அரிசி விலை உயர்வு காரணமாக மீண்டும் அந்த வரிசை யுகம் ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான வரிசை யுகம் அம்பலாந்தோட்டையில் கட்டுப்பாட்டு விலையில் பொதுமக்களுக்கு இன்று(06) சிவப்பு அரிசி விநியோகிக்கப்பட்டட நிலையில் ஆரம்பமாகியுள்ளது.

கிலோகிராம் ஒன்று 220 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலையில் நபர் ஒருவருக்கு ஐந்து கிலோகிராம் அரிசி வழங்கப்பட்டது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று அரிசி வாங்கியதுடன், குறைந்த அளவு அரிசியே விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரிசி வாங்க வந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...