3 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மீண்டும் வரிசை யுகம்

Share

இலங்கையில் மீண்டும் வரிசை யுகம்

இலங்கையில் கோட்டாபயவின் (gotabaya rajapaksa)ஆட்சிக்காலத்தில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏறபட்டு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் நாளாந்தம் மக்கள் பொருட்கள் வாங்க வரிசையில் நின்றனர்.

ஆனால் அந்த வரிசை யுகத்தை ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) இல்லாதொழிததார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் வரிசை யுகம் ஆரம்பித்துள்ளது. அதுவும் அநுர குமாரவின் (anura kumara dissanayake)ஆட்சிக்காலத்தில்.

முன்னார் தேங்காய் விலை உயர்வு மற்றும் கடும் தட்டுப்பாடு காரணமாக கட்டுப்பாட்டு விலையில் அதனை வழங்குவதற்காக அரசாங்கம் தேங்காய்களை வழங்கியபோது அதனை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

தற்போது அரிசி விலை உயர்வு காரணமாக மீண்டும் அந்த வரிசை யுகம் ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான வரிசை யுகம் அம்பலாந்தோட்டையில் கட்டுப்பாட்டு விலையில் பொதுமக்களுக்கு இன்று(06) சிவப்பு அரிசி விநியோகிக்கப்பட்டட நிலையில் ஆரம்பமாகியுள்ளது.

கிலோகிராம் ஒன்று 220 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலையில் நபர் ஒருவருக்கு ஐந்து கிலோகிராம் அரிசி வழங்கப்பட்டது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று அரிசி வாங்கியதுடன், குறைந்த அளவு அரிசியே விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரிசி வாங்க வந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...