tamilni 172 scaled
இலங்கைசெய்திகள்

மின்சாரம் தடைப்பட்டமையினால் ஏற்பட்ட இழப்பு

Share

மின்சாரம் தடைப்பட்டமையினால் ஏற்பட்ட இழப்பு

இலங்கை முழுவதும் சுமார் 5 மணித்தியாலங்கள் ஏற்பட்ட மின் தடையால் 600 கோடி ரூபா பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் மின்வெட்டைத் தடுப்பதற்காக வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டதே இதற்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபைக்கு இந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பரிந்துரைகளை புறக்கணித்ததற்கு தற்போதைய மின்சார அமைச்சர் மற்றும் மின்சார அமைச்சின் செயலாளரே பொறுப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி இதேபோன்று ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக சுமார் 1500 கோடி ரூபா பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...