5 6
இலங்கைசெய்திகள்

தமிழர்பகுதியில் தேசிய கீதத்திற்கு எழுந்து மரியாதை செலுத்தாத மதகுருமார்

Share

வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்படும் போதும், தேசிய கீதம் இசைக்கப்படும் போதும் மதகுருமார் எழுந்து மரியாதை செலுத்தாத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (04) இடம்பெற்ற சுதந்திர நிகழ்வின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா (Anura Kumara Dissanayake) பதவியேற்பு நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பௌத்த மதகுரு உட்பட அனைத்து மதகுருமாரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியிருந்தனர்.

இந்தநிலையில், வவுனியாவில் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொண்ட பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதகுருமார் தேசிய கொடி ஏற்றும் போதும், தேசிய கீதம் இசைக்கும் போதும் எழுந்து மரியாதை செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தமது இடத்திலேயே அமர்ந்திருந்து அதனை பார்வையிட்டுக் கொண்டிந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது

Share

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...